சென்னை தண்டையார்பேட்டையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்து அப்பளம் தயாரிக்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், சுகாதாரமற்ற முறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 15 டன் கலர் அப்பளங்களையும் 250 கிலோ ரசாயனப் பொருட்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் கிடங்குக்கும் சீல் வைத்தனர். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இது போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலர் அப்பளங்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதனை […]
