மாணவிகள் விடுதியில் மர்ம நபர்கள் கற்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் பகுதியில் இருக்கும் தலக்குளத்தில் ஒரு தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் படிக்கும் நர்சிங் மாணவிகளுக்கான தனியார் விடுதியும் இந்த வளாகத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் மாணவிகள் தங்கும் இந்த விடுதியில் மர்ம நபர்கள் சிலர் கற்களை தூக்கி வீசி உள்ளனர். இதனால் 2 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். இந்த […]
