கறுப்பினத்த நபர் ஒருவர் பாதுகாவலர்களால் அடித்து கொல்லப்பட்டதையடுத்து அப்பகுதியில் போராட்டம் வெடித்துள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள போர்டோ அலெகிரே நகரத்திலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ(40) என்பவர் பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த பல்பொருள் அங்காடி முழுவதும் போராட்டக்காரர்கள் சூறையாடப்பட்டுள்ளது. பிரேசில் முழுவதும் கருப்பினத்தவர் உரிமை மீட்பு முழக்கங்கள் எழ ஆரம்பித்துள்ளன. பிரேசிலில் ஏற்கனவே கறுப்பின மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள் […]
