பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்திலுள்ள கலபுரஹு மாவட்டத்தில் வசிப்பவர் இப்ரானா பேகம். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு சம்பவத்தன்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரசவத்திற்காக கலபுராஹாவிலுள்ள மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது பேகத்திற்கு பிரசவ வலி அதிகமானதால் கார் வேகமாக சென்றுள்ளது. இந்நிலையில் சவலஹு கிராம பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் வேகமாக மோதியுள்ளது. இதனால் காரும்,லாரியும் பக்கத்திலுள்ள பள்ளத்தில் விழுந்து […]
