சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சரியான சாலை இணைப்பு மற்றும் அடிப்படை மருத்துவ உதவி கிடைப்பதில்லை. இதனால் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) மற்றும் சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎப்) போன்றோர் அங்குள்ள கிராமத்தில் பாதுகாப்புப்படை முகாமில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் பொட்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பழங்குடி பெண்ணான மாயா என்ற கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவவலி ஏற்பட்டது. இதற்கிடையில் சுகாதார மையம் தொலைவில் உள்ளதால் கிராம மக்கள் […]
