கணவருடன் சேர்த்து வைக்ககோரி கர்பிணி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள மேலக்கூடலூர் பகுதியில் உள்ள கருணாநிதி காலனியில் முருகேஸ்வரி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான இவர் நேற்று மண்ணெண்ணையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நுழைவு வாயில் நின்று திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக அவரை தடுத்து […]
