நடத்துனரை தரக்குறைவாக பேசி தாக்கியவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள சொக்குடையான்பட்டியை சேர்ந்த சுபாஷ் என்பவரும், சொக்கதேவன்பட்டியை சேர்ந்த பிரபு என்பவரும் சொக்காணூரனி அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தில் பணியில் இருந்தனர். அப்போது பேருந்து புறப்படுவதில் இவர்கள் இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரபு, சுபாசை தரக்குறைவாக பேசி தாக்கியதாக […]
