Categories
தேசிய செய்திகள்

காய்ச்சலால் உயிரிழந்த முதியவர்… கொரோனா பீதியில் வெளிவராத மக்கள்… அடக்கம் செய்ய சைக்கிளில் தூக்கி சென்ற அவலம்…!!

காய்ச்சலால் உயிரிழந்த முதியவரின் உடலை அடக்கம் செய்ய உதவ யாரும் முன்வராத செயல் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கித்தூர் தாலுகா எம்.கே.உப்பள்ளி காந்திநகரை சேர்ந்தவர், சதப்பா பரசப்பா சககாரா (வயது 71). இவர் சென்ற 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் அவர் பெலகாவியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு 2 நாள் சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பி உள்ளார். மேலும் அவருக்கு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவை உலுக்கும் கொரோனா… இன்று மட்டும் 6,257 பேருக்கு தொற்று உறுதி…!!…

கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 6257 ஆக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவமாடி வருகின்ற நிலையில் தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று ஒரேநாளில் 6,473 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். இதனால் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

“மக்களுக்கு எதிரான ஆட்சி”… பாஜகவை கண்டித்து போராட்டம்… டி.கே சிவக்குமார் தீவிரம்…!!

பா.ஜக அரசு மக்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தி வருகிறது. அதனால் இந்த அரசை எதிர்த்து காங்கிரஸ் அமைப்பு தீவிர போராட்டம் நடத்தும் என டி.கே சிவக்குமார் கூறியுள்ளார். பெங்களூரில், “இந்தியாவை பாதுகாப்போம்” என்ற பெயரில் பல்வேறு துறைசார்ந்த காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அந்தப் போராட்டத்தில் டி.கே சிவகுமார் பேசியபோது, “நாட்டை பாதுகாக்க அனைத்து அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. தொழிலாளர்கள் தங்கள் அமைப்புகளுடன் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இதை நான் […]

Categories
தேசிய செய்திகள்

பாகுபாடில்லாமல் தாக்கும் கொரோனா… சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுக்கு தொற்று உறுதி…!!

கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் சென்ற ஜூன் மாதம் முதல் வேகமாக பரவி வரும் நிலையில், வயது வித்தியாசம் எதுவும்  இல்லாமல் அனைவரையும் இந்த வைரஸ் தாக்கி வருகிறது. மேலும் இந்த மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக தினமும் கொரோனா பாதிப்பு 5,000க்கும் மேல் இருந்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் தலைவர்கள் வரை இந்த வைரஸ் தனது தாக்குதலை ஏற்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

“பெண் குழந்தை” ஒரு மாதத்தில் பெற்றோர்கள் செய்த கொடூரம்… நாடகத்தை கண்டு பிடித்த காவல்துறையினர்….!!

பெண் குழந்தை பிறந்ததால் பெற்றோர்கள் கிணற்றில் தூக்கி எறிந்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், உத்தரகாண்ட் மாவட்டத்தில் உள்ள யெல்லாபுரம் வட்டத்தின் சஹஸ்ராலி கிராமத்தில் வசிப்பவர், சந்திரசேகர பட் -பிரியங்கா பட். இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 2ம் தேதி, அடையாளம் காண முடியாத  நபர் ஒருவர் தங்கள் ஒரு மாத பெண் குழந்தையைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டதால், தங்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும் கூறி, யெல்லபுரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, காவல் துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி…. மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி….!!

கர்நாடக மாநிலத்தின் முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்போது மாநிலத்தின் முன்னாள் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது பற்றி தனது டுவிட்டரில் பக்கத்தில் சித்தராமையா பதிவிட்டு இருப்பதாவது, “ எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைப்படி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட உள்ளேன். அண்மையில் என்னை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எடியூரப்பாவுக்கு பதிலாக லட்சுமணன் சவுதி பதவி ஏற்பாரா?.. வெளியான பரபரப்பு தகவல்..!!

கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருக்கும் எடியூரப்பா நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக லட்சுமணன் சவுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு 78 வயதாகி விட்டது. ஆனாலும் அவர் பா.ஜனதாவில் மக்களின் செல்வாக்கு பெற்ற தலைவராக இருக்கிறார். மேலும் அவர் பெரும்பான்மை சமூகமான லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவராக உள்ளார். அந்த சமூகம் தான் பா.ஜனதாவின் பலமாக இருக்கிறது. குறிப்பாக வட கர்நாடகாவில் அந்த சமூக மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். அந்த வட கர்நாடகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

3 மருத்துவமனைகளில் அனுமதி மறுப்பு …. ஆட்டோவில் நடந்த பிரசவம்… உயிரிழந்த பிஞ்சுக்குழந்தை..!!

மூன்று அரசு மருத்துவமனைகளில் அனுமதி கிடைக்காத நிலையில் ஆட்டோவிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்த சம்பவத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு அடுத்து கர்நாடக மருத்துவமனைகளின் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதில் புற நோயாளிகளுக்கு அனுமதி மறுப்பது, ஆம்புலன்ஸ் தாமதம், என தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கர்ப்பிணி ஒருவரை 3 அரசு மருத்துவமனைகளிலும் அனுமதிக்க மறுத்ததால் அவருக்கு ஆட்டோவிலேயே பிரசவம் நடந்துள்ளது. இதில் பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளது. விக்டோரியா மருத்துவமனையில் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

கொரோனா வார்டிற்குள்….. “பன்றிகள் கூட்டம்” சுகாதாரதுறை அமைச்சர் விளக்கம்….!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வார்டிற்குள் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு குறைந்தபாடில்லை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதைப் போலவே குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. இது ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும் இந்தியாவின் பல பகுதிகளில் சில மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

4 வயது சிறுவனை கவ்வி சென்ற சிறுத்தை… கிராம மக்கள் கண்ட காட்சி…. துடித்து போன பெற்றோர்…!!

சிறுத்தை கடித்து குதறியதால் 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தில் உள்ள ராஜேந்திராபுரா என்ற கிராமத்தில் வசிப்பவர் முனிராஜ். இவரின் மனைவி தொட்டரம்மா. இந்த தம்பதிக்கு 4 வயதில் சந்துரு என்ற சந்திரசேகர் என்ற ஒரு மகன் இருந்தான். இவர்கள் வசிக்கும் கிராமம் வனப்பகுதியிலிருந்து 500 மீட்டர் தூரத்திலேயே உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் சிறுவன் சந்துரு வீட்டின் முன்பு  விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் மரணம்….. உடலடக்கம் இப்படி தான் இருக்குமா…? சர்ச்சையை கிளப்பிய வீடியோ….!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோயாளிகளை அடக்கம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனுடைய பாதிப்பு ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே செல்ல, அதேசமயம் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்த பின் அவர்களது உடல்கள் எவ்வாறு அடக்கம் செய்யப்படுகிறது என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது. அவ்வப்போது புறநோயாளிகள் இரக்கமற்ற முறையில் அடக்கம் செய்யப்படுவது குறித்த வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய […]

Categories
தேசிய செய்திகள்

காற்றுக்காக திறக்கப்பட்ட கதவு… 3 வயது குழந்தையை பறிகொடுத்த பரிதாபம்!

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள கடராய்யன் பால்யா என்ற  கிராமத்தில்  வசிக்கும் தம்பதியினர் தங்களது 3 வயது மகனுடன்  இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள் காற்று இல்லாமல் சிரமப்பட்டுள்ளனர். பின்பு வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளனர். அப்போது, திடீரென்று வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, ஒன்று தூங்கிக்கொண்டிருந்த  3 வயது சிறுவனை தரதரவென வெளியே உள்ள  புதரில் இழுத்துச் சென்றுள்ளது. அந்த குழந்தையை கொடூரமாக கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளது. இதையடுத்து, அதிகாலை […]

Categories

Tech |