யானை தனது குட்டியுடன் காரை வழிமறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலத்திலுள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு லாரியானது கர்நாடக மாநிலத்தில் விளையும் கரும்புகளை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்கிறது. அப்போது அந்த வழியாக செல்லும் லாரி ஓட்டுனர்கள் சாலையோரம் கரும்புகளை வீசுவார்கள். இதனை எதிர்பார்த்து ஏராளமான யானைகள் அங்கு காத்துகொண்டிருக்கும். இந்நிலையில் யானை ஒன்று தனது குட்டியுடன் […]
