தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அதிக அளவு ரத்தப்போக்கு காரணமாக திடீரென இளம்பெண் உயிரிழந்தார் இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் இளம்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது தெரியவந்தது. இதனையடுத்து மீண்டும் கர்ப்பமான இளம்பெண் பார்ப்பாரப்பட்டியில் இருக்கும் மருந்து கடையில் கருத்தடை மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். […]
