மூதாட்டியின் காதை அறுத்து கம்மலை பறித்த வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரியம்பாளையத்தில் சின்னச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள்(65) என்ற மனைவி இருக்கிறார். கடந்த 31-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மூதாட்டி செல்லம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மூதாட்டியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல் நடித்து, அவர் அணிந்திருந்த தங்க கம்மல்களை கத்தியால் காதை அறுத்து […]
