மத்திய பிரதேச மாநில அரசியல் சூழலுக்கு நாங்கள் காரணமில்லை என்று பாஜகவின் முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசை முதலமைச்சர் கமல்நாத் வழிநடத்தி வந்தார்.காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சம் புகுந்தனர். இதனால் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. […]
