குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை தம்பி வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு கார்த்திகேயன் மற்றும் சுரேஷ் என்று திருமணம் ஆகாத இரு மகன்கள் இருக்கிறார்கள்.தற்பொழுது டிரைவராக வேலை பார்த்து வரும் கார்த்திகேயன் தினமும் குடித்துவிட்டு வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து நேற்றும் கார்த்திகேயன் குடித்துவிட்டு அக்கம்பக்கத்தினரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த தம்பி சுரேஷ் அண்ணனை தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த […]
