மோட்டார் சைக்கிளில் கன்றுக்குட்டியை திருடிவந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் பகுதியில் பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நடுவில் ஒரு கன்று குட்டியை கொண்டு வந்தனர். இதனையடுத்து 3 பேரையும் நிறுத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில்களை […]
