உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெண் குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் கல்வியை கருத்தில் கொண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளார். அதாவது கன்யா சுமங்கலா யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் இருப்பவர்கள் சேர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 14 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பெற்றுள்ளதாகவும், ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது எனவும் முதல்வர் கூறியுள்ளார். […]
