ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரத்தில், 24 வயது பெண் ஒருவருக்கு கடந்த மே 11-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு குக்டி மரபின்படி, அப்பெண்ணுக்குக் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியுள்ளனர்.அவர் அந்தச் சோதனையில், தன்னுடைய கன்னித்தன்மையை நிரூபிக்கத் தவறியதால், மாப்பிள்ளை வீட்டார், பெண்ணை அடித்துத் துன்புறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அந்தப் பெண் தன்னுடைய அண்டை வீட்டாரால், தான் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதையும், இது குறித்து சுபாஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதையும் கூறினார். பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் […]
