சபரிமலையில் நடைபெற்ற சித்திரைவிஷூ கனி தரிசனத்தில் பெரும்பாலான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சித்திரை விஷூ திருவிழாவிற்காக சபரிமலை நடை ஏப்ரல் 10 மாலை வேளையில் திறக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் வழக்கமான பூஜைகள், உதயாஸ்தமன பூஜைகள், படி பூஜையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சித்திரை விஷூ நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக நேற்றுமுன்தினம் இரவு ஐயப்பன் விக்ரகம் முன்பு மலர்கள், காய் கனிகளால் அலங்கரிக்கப்பட்டு நடை அடைக்கப்பட்டது. அதன்பின் நேற்று அதிகாலை […]
