தமிழகத்தில் கனிமவள கொள்ளையை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நிதி பற்றாக்குறை உள்ளதாக 4 மாவட்ட ஆட்சியர்கள் தாக்கல் செய்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. சட்டவிரோத கிரானைட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞான மற்றும் ஜெயச்சந்திரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கனிமவளம் கடத்தப்படுவதை தடுக்க தர்மபுரி, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஏற்கனவே […]
