தன்னுடைய 4 மாத குழந்தையை மீட்புப் பணியாளர்களிடம் தூக்கி வீசி காப்பாற்றிய பின் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சீனாவில் கடந்த 1,000 வருஷத்தில் இல்லாத அளவில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் மத்திய சீனாவிலுள்ள ஹெனான் மாவட்டத்திலிருக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த பெரு வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலரும் படுகாயமடைந்துள்ளார்கள். […]
