இளைஞர்கள் மூவர் சேர்ந்து சிறுமியை கத்தியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள ரொறொன்ரோ என்ற பகுதியில் அமைந்துள்ள Dawes என்ற சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றில் 14 வயது சிறுமி கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை 7 மணியளவில் நடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இச்சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அச்சிறுமியின் […]
