பிரிட்டனில் கோடீஸ்வரரான சர் ரிச்சர்ட் லெக்சிக்டன் நேற்று இரவில் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் பெரிய பணக்காரர்களில் ஒருவரான சர் ரிச்சர்ட் லெக்சிக்டன்(83) மற்றும் அவரின் இரண்டாம் மனைவி Anne Schreiber(65) ஆகிய இருவரும் தென் மேற்கு இங்கிலாந்தில் உள்ள Dorest பகுதியில் இருக்கும் மாளிகையில் தங்கியிருந்த போது மர்ம நபர் ஒருவரால் நேற்று இரவில் கத்தியால் தாக்கப்பட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ரிச்சர்ட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]
