தமிழகத்தில் வெயில் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அனல் காற்றும் வீசியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வங்கக் கடலின் உருவான ஆம்பன் புயல் ஈரப்பதத்தை இழுத்து சென்றதால் தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரித்தது. மேலும் திருச்சி, கரூர், ஈரோடு, மதுரை, சென்னை, […]
