கதிர் அறுக்கும் இயந்திரம் ஏறி தந்தையின் கண்முன்னேயே சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருமருதூர் கிராமத்தில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற 14 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் கிடங்கு பகுதிக்கு கதிர் அறுக்கும் அறுவடையை பார்க்க சென்றுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹரிஹரனை அமர்த்திவிட்டு அவரது தந்தையான ராஜமாணிக்கம் அருகில் நின்று கொண்டிருந்தார். இதனை அடுத்து தந்தை […]
