அண்ணன் சாவிற்கு ஏன் வரவில்லை என்று தந்தை கேட்டதால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கதிரம்பட்டி கிராமத்தில் சரவணன்- நந்தினி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு யஸ்வந்த், நிரஞ்சன் என இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கணவன் சரவணன் தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் ஆண்டியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தினியின் பெரியப்பா மகன் குமார் என்பவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்து விட்டார். இதனால் […]
