தம்பி ஒருவர் தனது அக்காவின் திருமணத்தன்று சாலை விபத்தில் உயிரிழந்ததால் அக்கா கதறியழுத சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் வசிப்பவர் ஜெகதீசன்(24). இவருடைய அக்காவிற்கு திருமணம் என்பதால் திருமணத்திற்கு செல்வதற்காக ஜெகதீசன் தன்னுடைய நண்பர்களான கார்த்திகேயன்(20) மற்றும் பார்த்தசாரதி(20) என்ற இருவரையும் தன்னுடன் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இருசக்கர வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப் பாதையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் […]
