நாமக்கல் மாவட்டத்தில் பெற்றோர் திட்டியதால் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள காமாட்சி நகரில் சீனிவாசன் என்பவர் அவரது மனைவி சுமதி மற்றும் பாரதி(20) மற்றும் ஸ்ரீநிதி(17) ஆகிய 2 மகள்களுடனும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 12ஆம் வகுப்பு படிக்கும் ஸ்ரீநிதி தற்போது கொரோனா காரணமாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியாக படித்து வந்துள்ளார். இதனையடுத்து ஸ்ரீநிதி அடிக்கடி செல்போன் பார்த்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். […]
