மியன்மார் ராணுவ வீரர்கள் மக்களின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். மியன்மார் ஜனநாயக ஆட்சி முறையை கவிழ்த்து ராணுவ ஆட்சியை நடப்பதை எதிர்த்து அந்நாட்டிலுள்ள இரு பெரிய நகரங்களான யாங்கூன் மற்றும் மண்டேலா போன்ற 40 இடங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வந்த நிலையில் அமைதியாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் திடீரென வன்முறையை நடத்தி ராணுவ வீரர்கள் மக்களை குருவியை சுடுவதுபோல் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளி உள்ளனர். […]
