பேருந்து குண்டுவெடிப்பு விபத்தில் பணியாளர்கள் பலியான சம்பவத்திற்கு சீன வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கொகிஸ்தான் பகுதியில் தாசு நீர் மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பெர்சீம் முகாமில் இருந்து நேற்று காலை ஒரு பேருந்தில் சீன இன்ஜினியர்கள், சீன வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட 30 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த பேருந்தை பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். […]
