டிக்கெட் பரிசோதனை அதிகாரியை கண்டித்து டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயம்பேட்டிலிருந்து பாரிமுனை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வைத்து டிக்கெட் பரிசோதகர் ஏறியுள்ளார். பின்னர் அவர் பயணிகளின் டிக்கெட்டை பரிசோதனை செய்தபோது வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபருக்கு பரிசோதகர் 500 ரூபாய் அபராதம் விதித்தார் பின்னர் பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் கண்டக்டரிடம் இதுகுறித்து விளக்கம் […]
