அரசு பேருந்து கண்டக்டரை தாக்கிய தொழிலதிபர் மகன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் அரசு பேருந்து ஒன்று திருப்பூரில் இருந்து தேனி செல்வதற்காக தாராபுரம் வந்தது. இந்த பேருந்தை டிரைவர் ரத்தினசாமி ஓட்டி வந்துள்ளார். அதில் கோபாலகிருஷ்ணன் என்பவர் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த அரசு பேருந்து தாராபுரம் அமராவதி ரவுண்டானா அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது தாராபுரம் பகுதியில் […]
