கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதையொட்டி தமிழக-கேரள எல்லைகளில் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கபடுகின்றன. கேரள மாநிலம் ஆலப்புழாவில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. எனவே தமிழக-கேரளா எல்லையான தேனியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் போடிமெட்டு, கம்பம்மெட்டு, மற்றும் குமுளி போன்ற சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினர் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நிலையில் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. […]
