நீலகிரி மாவட்டம் ரன்னிமேடு பகுதியில் காட்டு யானைகளை விரட்டி அடிக்க தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் தீவனம் மற்றும் குடிநீர் தேடி காட்டு யானைகள், காட்டெருமைகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் குடியிருப்பு பகுதியை நோக்கி வந்துள்ளன. இதை தொடர்ந்து வனப்பகுதியை விட்டு வெளியே வந்துள்ள யானைக்கூட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் ரோட்டை கடந்து அங்கு இருக்கின்ற ரன்னிமேடு தண்டவாளத்தில் முகாமிட்டு அதில் உள்ள […]
