கேரளாவில் சமூக வலைதளங்களில் குழுக்களை தொடங்கி மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவித்து வந்த தம்பதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர் மற்ற ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட கட்டாயபடுத்துவதாக கூறினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மனைவிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதனைத்தொடர்ந்து ஆலப்புழை, […]
