தனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என இளம்பெண் குழந்தைகளுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள சின்னகவுண்டாபுரம் பகுதியில் மணிமேகலை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மணிமேகலை, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற மணிமேகலை போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீ அபினவ் என்பவரை சந்தித்து அவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கும் […]
