வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை மிரட்டிய கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள காட்டுபாளையத்தில் திருநாவுக்கரசு(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருநாவுக்கரசு மகாலட்சுமி(25) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திருநாவுக்கரசு, அவரது தாயார் மணிமேகலை, உறவினர் ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து மகாலட்சுமியை வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மகாலட்சுமி கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் […]
