மோட்டார் சைக்கிளில் கணவருடன் வந்த பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் பகுதியில் மாரிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரதிதேவி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் தனியார் பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து அவர்கள் பெருமாநல்லூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 […]
