மனைவி உயிருக்குப் போராடும் நிலையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் பகுதியில் அத்திவெட்டி சிவிக்காடு பகுதியில் சச்சிதானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயசித்ரா என்ற மனைவியும் ஹேம்நாத் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சச்சிதானந்தம் 2 மாதங்களாக தனது சொந்த ஊரில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். சச்சிதானந்திற்கும் அவருடைய மனைவி ஜெயசித்ராவுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. […]
