கடனை திருப்பி செலுத்த முடியாததால் மனமுடைந்த கணவன்-மனைவி விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பொடியை அடுத்துள்ள அம்மாபட்டி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும் தினேஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பையா கடன் வாங்கி வீடு கட்டியுள்ளார். இதனையடுத்து தினேஷ்குமாரும் எவ்வித உதவியும் செய்யாமல் இருந்ததால் கருப்பையா கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக […]
