கணவர் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள கல்லல் பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், மகன்களும் உள்ளனர். இந்நிலையில் தர்மலிங்கத்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே தர்மலிங்கம் கடந்த 30 வருடங்களாக சின்னதேவபட்டியில் வசிக்கும் தனது அக்காவான பஞ்சவர்ணம் என்பவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். […]
