குடும்ப தகராறில் கணவனை கத்தியால் குத்திய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சந்தோஷ் சென்னையில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்ற போது அவருக்கும் சென்னை மண்ணடி பகுதியில் வசிக்கும் சுரேகா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து […]
