கட்டிட தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் ஒரு ஆணின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த ஆண் கொலை செய்யப்பட்டார ? […]
