பொது இடங்களிலும் வீடுகளிலும் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.அதன்படி விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் குட்கா மற்றும் மதுபானங்கள் போன்ற போதை பொருட்களை உட்கொள்ளக் கூடாது. ஊர்வலத்தின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் அல்லது அநாகரிகமான உரையாடல்கள் இருக்கக் கூடாது. அரசியல் கட்சி அல்லது மதம் சமூகத்தை குறிப்பிடும் விதத்தில் பாடல்கள் மற்றும் நடனம் இருக்கக் கூடாது.அரசியல் கட்சிகள் மற்றும் […]
