இன்டிகோ நிறுவனமானது தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு கட்டணத்தில் 10% தள்ளுபடி அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, இந்த சலுகையால், அதிகமானோர் தடுப்பு ஊசி எடுத்துக் கொள்வார்கள், இண்டிகோவில் பயணிப்பவர்களில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. இந்திய மக்களில் 18 வயதுக்கு அதிகமானவர்களுக்கு தான் இச்சலுகை வழங்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் தான் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யும் சமயத்தில் தடுப்பு ஊசி செலுத்தியிருக்க வேண்டும். […]
