கோடை விடுமுறைக்கு பிறகு இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, ஓஎம்ஆர் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக 8:30 மணி முதல் 10 மணி வரை அலுவலகத்திற்கு செல்பவர்கள் சாலையில் […]
