நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம் முன்பாக மக்கள் திரண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தலீபான்களின் கட்டுப்பாட்டில் சென்றது. இதனால் அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனை அடுத்து பல மாகாணங்களை தலீபான்கள் தங்கள் கைவசப்படுத்தினர். மேலும் தலீபான்கள் உத்தரவின் படி, கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அங்கு தங்கியிருந்த அனைத்து அயல்நாட்டு படைகளும் முழுவதுமாக ஆப்கானை விட்டு வெளியேறினர். […]
