இறந்த நிலையில் 2 கடல் ஆமைகள் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் பகுதிக்கு அருகில் உள்ள கூட்டப்புளி மீனவ கிராமத்தில் 30 கிலோ எடையுள்ள 2 கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இதனை கண்ட மீனவர்கள் இது குறித்து கடலோர காவல்படை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து ஆமைகள் அழுகிய […]
