செல்ஃபி எடுக்க முயன்ற போது பாறையிலிருந்து வழுக்கி கடலுக்குள் விழுந்ததில் இரு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதியில் பாறைகளில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற போது கடல் அலையில் சிக்கி இரு வாலிபர்கள் மாயமான நிலையில் இன்று இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 17 இளைஞர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உறவினரின் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு டிசம்பர் 30-ஆம் தேதி சென்றிருந்தனர். அன்று மாலை 5 மணி […]
