நாகை அருகே கடலில் மிதந்து வந்த இரண்டு கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரத்தில் மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது இரண்டு பாலித்தீன் பை பொட்டலங்கள் காமேஸ்வரத்திலிருந்து 2 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலில் மிதந்து வந்துள்ளது. அதை பார்த்த மீனவர்கள் அந்த பாலித்தீன் பை பொட்டலங்களை எடுத்து கீழையூர் பகுதியில் உள்ள கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் அந்த பைகளை பிரித்து பார்த்தபோது இரண்டு பையிலும் 2 கிலோ […]
