ஈரான் நாட்டின் கப்பற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ஈரான் நாட்டுடன் போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகியது முதல் இருநாடுகளுக்குமிடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த சம்பவத்தில் வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் பக்கம் இருக்கிறது. மேலும் மோதலின் காரணத்தால் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்தே கப்பல் செல்லும் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் […]
