திண்டுக்கல்லில் கடனை திருப்பி கொடுக்க முடியாத மன வேதனையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி இருந்தார். கணவன்-மனைவி இருவரும் பழ வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்த வியாபாரத்திற்க்காக இவர்கள் பல இடங்களிலும் கடன் வாங்கியுள்ளனர். ஆனால் வாங்கிய கடனை இவர்களால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் முத்துலட்சுமி மனவேதனையில் இருந்து […]
